அந்தாக்யா: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 46,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் துருக்கி மற்றும் வட சிரியாவில் கடந்த 6ம் தேதி 7.8 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சரிந்து இடிந்து விழுந்தன. எங்கு பார்த்தாலும் கான்கிரீட் குவியல்களாக காட்சியளிக்கிறது. இந்த கட்டிடக் குவியல்களிடையே உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் படை, நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.