பெங்களூரு: கடந்த 1989 மே 10ம் ேததி மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜூனா நடிப்பில் வெளியான தெலுங்கு படம், ‘கீதாஞ்சலி’. இது மணிரத்னம் தெலுங்கில் இயக்கிய முதல் படம். தமிழில் ‘இதயத்தை திருடாதே’ என்ற பெயரில் டப்பிங் செய்து, அதே தேதியில் திரைக்கு கொண்டு வரப்பட்டது. பி.சி.ஸ்ரீ ராம் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்திருந்தார். மனதை உருக்கும் காதல் கதை கொண்ட படமான இது மிகப்பெரிய வெற்றிபெற்றது. அனைத்துப் பாடல்களும் ஹிட்டானது. தேசிய விருதையும், நந்தி விருதுகளையும் பெற்ற இப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிஜா. தற்போது அவருக்கு 53 வயதாகிறது. அவரது தந்தை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்.