கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து சொகுசு காரில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை சென்ற கார் கடற்கரையோரம் சுனாமி குடியிருப்பு அருகே நின்றது. பின்னர் காரில் இருந்த மதுபாட்டில்கள் டூவீலர் மற்றும் ஆட்டோவில் மாற்றப்பட்டது.