ஆந்திராவில் 125 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை: ஏப். 14ம் தேதி திறப்பு

விஜயவாடா: ஆந்திராவில் 125 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஏப். 14ம் தேதி திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஆந்திரா மாநில அரசின் சார்பில் விஜயவாடா அடுத்த ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் 125 அடி வெண்கலச் சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மாநில அமைச்சர்கள், அம்பேத்கர் நினைவிடப் பணிகளை பார்வையிட்டனர்.

தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சர் நாகார்ஜுனா கூறுகையில், ‘300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 125 அடி உயரத்தில் அம்பேத்கரின் சிலை அமைக்கப்படுகிறது. இந்த அம்பேத்கர் நினைவுப் பூங்காவில், அவரது சிலை மட்டுமின்றி நூலகம், மாநாட்டு அரங்கம் உள்ளிட்ட வசதிகள் இருக்கும். தற்ேபாது அரங்குகள் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விஜயவாடா நகரின் மையப்பகுதியில் 19 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த நினைவு பூங்கா மற்றும் சிலை, அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதி திறக்கப்படும்’ என்றார்.

Related Stories: