மாஸ்கோ: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித் துறைக்கு தலைமை பதவி வகித்த அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி மரினா யாங்கினா (58), செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 16வது மாடியில் விழுந்து இறந்ததாக ‘தி இன்டிபென்டன்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த செய்தியில், ‘செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கலினின்ஸ்கி பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் நடைபாதையில் மெரினா யாங்கினாவின் உடலை பொதுமக்கள் பார்த்தனர். தகவலறிந்த போலீசார் மரினா யாங்கினாவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.