தமிழிசையுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

சென்னை: தமிழக பாஜ மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார். சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார். அவருக்கு தமிழிசை சவுந்தரராஜன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக தமிழிசை சவுந்தராஜன் தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை எனது இல்லத்தில் மகிழ்ச்சியோடு வரவேற்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டேன் என்றார்.

Related Stories: