உபியில் 30 புதிய ஓட்டல்கள் ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம்

லக்னோ: உபியில் 30 இடங்களில் புதிய ஓட்டல்கள் அமைப்பதற்கு ஜப்பான் ஓட்டல் குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது. உபி மாநிலம் லக்னோவில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. மாநாட்டின் 2ம் நாளான நேற்று பிரபல ஜப்பான் நிறுவனமான ஓட்டல் மேனேஜ்மென்ட் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் உபி அரசுடன் ரூ.7,200 கோடிக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி வாரணாசி, ஆக்ரா, அயோத்தி உள்பட 30 நகரங்களில் புதிய ஓட்டல்கள் அமைக்கப்படும் என்று நிறுவனத்தின் செய்தி தொடர்பு இயக்குனர் தெரிவித்தார்.

Related Stories: