திருவனந்தபுரம்: கோட்டயம் அருகே மாணவிகளை பலாத்காரம் செய்த சம்பவத்தில் மதரசா ஆசிரியருக்கு 169 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.6.4 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே ஆலுவா பகுதியை சேர்ந்தவர் யூசுப் (72). கோட்டயம் அருகே உள்ள கடுத்துருத்தியில் ஒரு அரபி பாடசாலையில் (மதரசா) ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2019ம் ஆண்டு மதரசாவுக்கு வரும் மாணவிகளை பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக தலையோலப்பரம்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியர் யூசுப் மாணவிகளை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.