ராமநாதபுரம்: பாம்பன் புதிய பாலம் கட்டுமான பணியின்போது கிரேன் விழுந்து வடமாநில கட்டுமான தொழிலாளி உயிரிழந்தார். ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் கடல் மீது புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கிரேன் மூலம் இரும்பு கிர்டரை இறக்கும்போது விழுந்ததில் படுகாயமடைந்த தொழிலாளி ஜுனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.