சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடங்களை இடிக்கும் முன் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் கட்டிடங்களை இடிக்கும் முன் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.