தாம்பரம்: தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் ஆதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மாலை இருவர் குடிபோதையில் பேசிக்கொண்டு இருந்தனர். திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. ஆத்திரமடைந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மற்ெறாருவரை குத்தி விட்டு தப்பி ஓடினார். இதை பார்த்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த சேலையூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.