திருவொற்றியூர்: திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை தியாகராஜ சுவாமி மற்றும் சந்திரசேகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. மாலையில் சந்திரசேகர சுவாமிகள்-திரிபுர சுந்தரி ஆகிய சுவாமிகள் ஆதிசேஷ குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளினர். பிறகு தெப்பம் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தை 5 முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.