ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் வரும் 24ம் தேதி முதல் நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநாடு இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு சட்டீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் வரும் 24ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர்கள் பவன் பன்சால், தாரிக் அன்வர் ஆகியோருடன் நேற்று ராய்ப்பூர் வந்தார்.