லக்னோ: தற்கொலை முயற்சி குறித்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவு குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்த தகவலையடுத்து 2 பேரின் உயிரை உ.பி. போலீசார் காப்பாற்றியுள்ளனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய இணையதளங்களை மெட்டா நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்துடன் உ.பி. போலீசார் கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஒன்று செய்தனர். இதன்படி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இணையதளங்களில் உ.பியை சேர்ந்த யாராவது தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பதிவிட்டால் உடனடியாக மாநில போலீசின் சமூக வலைதள பிரிவுக்கு மெட்டா நிறுவனம் தகவல் அளிக்க வேண்டும்.
இதன்படி கடந்த ஜனவரி 31ம் தேதி காஜியாபாத்தை சேர்ந்த ஒருவர் தனது தற்கொலை முயற்சியை இன்ஸ்ட்ராகிராம் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பினார். இதுபற்றிய தகவலை மெட்டா நிறுவனம் உ.பி போலீசுக்கு உடனடியாக தெரிவித்தது.