சென்னை: பொது வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு, எடப்பாடி தரப்பில் இருந்து எங்களுக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். சென்னையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். இந்த பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட மாட்டோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நாங்கள் அடியெடுத்து வைக்கிறோம். அதிமுக சார்பில், இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் நாங்கள் ஆதரிப்போம்.