ஷில்லாங்: மேகாலாயாவில் இந்த மாதம் 27ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு ஆளும் தேசிய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை முதல்வர் கான்ராட் கே சங்மா வெளியிட்டார். இதனை தொடர்ந்து முதல்வர் சங்மா கூறுகையில்,‘‘ தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். கிராம மற்றும் நகர்புறங்களில் தொழில்முனைவோர், சுற்றுலா, டிஜிட்டல், வேளாண் செயலாக்கம் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.