விழுப்புரம்: விழுப்புரம் காகுப்பத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் ஜோதி(21). இவர் அரசு கல்லூரியில் எம்ஏ முதலாண்டு படித்து வந்தார். நேற்று காலை இவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜோதி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.