ஐதராபாத்: வந்தே பாரத் ரயிலை போன்று, விரைவில் வந்தே மெட்ரோ ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “வந்தே பாரத் ரயிலின் வெற்றியை தொடர்ந்து, குறைவான தூரத்தில் உள்ள இரண்டு நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில்களை கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.