டெல்லி: வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி இசைப்பாடகி வாணி ஜெயராம் (78) இன்று திடீரென்று மணமடைந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்து கிடந்தார். படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இவரது மரணம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் வாணி ஜெயராம் உடல் பிற்பகல் 2 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.