மற்றவர்களின் வேலைகளில் ஒன்றிய அரசு தலையிடக்கூடாது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவீட்

டெல்லி: மாநில அரசுகள், நீதிபதிகள், விவசாயிகள், வணிகர்கள் என அனைவருடனும் மோடி அரசு மோதல் போக்கில் உள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அனைவருடனும் ஒன்றிய அரசு மோதல் போக்கை கடைபிடித்தால் நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்காது. ஒன்றிய அரசு தங்களின் வேலையை செய்ய வேண்டும்; மற்றவர்களை அவர்களின் வேலையை செய்ய விட வேண்டும். மற்றவர்களின் வேலைகளில் ஒன்றிய அரசு தலையிடக்கூடாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவீட் செய்துள்ளார்.

Related Stories: