உஜ்ஜைன்: மத்தியப்பிரதேசத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற காவல்துறையினர் மீது குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள Jhitar Khedi கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் உதவியுடன் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியை சிலர் ஜேசிபி இயந்திரத்தை தடுத்து நிறுத்தி காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர்.