தென்காசி: குற்றாலம் வனசாரகத்திற்குட்பட்ட பகுதிகளில் குரங்குகளுக்கு உணவளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. குரங்குகளை இடையூறு செய்வது, உணவளிப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வன உயிரின சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட வனச்சரக அலுவலர் அறிவித்துள்ளார்.