சென்னை: பழனிசாமி தரப்பு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தென்னரசே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழுவில் பழனிசாமிக்கு அதிக ஆதரவாளர்கள் உள்ளதால் தென்னரசு அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளராகிறார். பன்னீர்செல்வத்துக்கு அதிமுக பொதுக்குழுவில் சொற்ப ஆதரவே இருப்பதால் வேட்பாளரை வாபஸ் பெறுவார் என தகவல் வெளியாகியிருக்கிறது.