ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவே தொடர்வார்: அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவே தொடர்வார் என அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார். பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவைத்தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்னரசுவை வேட்பாளராக நிறுத்துவது குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க தமிழ் மகன் உசேன் வலியுறுத்தியுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத்தலைவர் தந்த ஒப்புதல் படிவத்தில் வேட்பாளர் தென்னரசு பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்க அவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: