சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆவின் பால் பொருட்களின் விலை, எளிய மக்கள் பாதிப்படையும்படி தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது அரசு. கடந்த 10 மாதங்களில் மட்டும், மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, புதுவிதமான விலை உயர்வை கொண்டு வந்திருக்கிறது. ஆவின் பச்சைநிற பால் வகையில் கொழுப்புச் சத்து அளவை 4.5% லிருந்து, 3.5% ஆக குறைத்திருக்கிறது தமிழக அரசு. மேலும் முகவர்களுக்கான கொள்முதல் விலையை அதிகரித்ததன் மூலம், 2 ரூபாய் அளவில் பால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆவின் பால் முகவர்கள் நலச் சங்கம் கவலை தெரிவித்திருக்கிறது.