குன்றத்தூர்: மாங்காட்டில் நீண்டகாலமாக வரிசெலுத்தாத 2 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல்வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அடுத்த மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகள், வணிக வளாகங்கள், வீடுகள் ஏராளமாக உள்ளன. இவற்றின் உரிமையாளர்கள் சிலர் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தொழில் வரி, சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை வசூல் செய்யும் பணியில் நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மாங்காட்டில் 2 கடை உரிமையாளர்கள் நீண்ட காலமாக வரிபாக்கி வைத்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை நகராட்சி ஆணையர் சுமா மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.