வேலை வாங்கி தருவதாக விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து இளம் பெண்களை ரு1 லட்சத்திற்கு விற்பனை செய்த பாலியல் புரோக்கர் கைது

*9 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்ததும் விசாரணையில் அம்பலம்

சென்னை: வேலை வாங்கி தருவதாக விமானத்தில் அழைத்து வந்து இளம் பெண்களை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்து வந்த பிரபல பாலியல் புரோக்கர் காத்த்திகேயனை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர், 9 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட இளம் ெபண்களை பாலியல் தொழிலில் தள்ளியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் படி நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவின் விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் இளம் பெண்களை வேலைக்கு அழைத்து வந்து பாலியல் புரோக்கர்களுக்கு விற்பனை செய்யும் நபர்கள் குறித்து ரகசியமாக விசாரணை நடத்தினர். அதில், சென்னை பெரம்பூரை சேர்ந்த ஜேக்கப்(எ)கார்த்திகேயன்(38) என்பவர் தனது நணபர்கள் 3 பேருடன் இணைந்து கடந்த 9 ஆண்டுகளாக இளம் பெண்களை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. இதை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் பாலியல் வழக்கில் கைது ெசய்யப்பட்ட புரோக்கர்கள் மற்றும் மீட்கப்பட்ட பெண்களிடம் நடத்திய விசாரணை மூலம் தெரியவந்தது.

கடந்த வாரம் பிரபல பாலியல் புரோக்கர் கார்த்திகேயன் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கார்த்திகேயன் கொரட்டூரில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க வருவதாக தெரிவித்தனர். அந்த தகவலின் படி, விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கார்த்திகேயன் குடும்பத்தினர் தங்கியுள்ள பகுதியில் கடந்த 2 நாட்களாக ரகசியமாக கண்காணித்தனர். பிறகு நண்பர்கள் கூறியபடி கார்த்திகேயன் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க வந்ததார். உடனே போலீசார் அதிரடியாக வீட்டிற்கள் புகுந்து கார்த்திகேயனை கைது செய்தனர்.

பின்னர் கார்த்திகேயனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஜேக்கப்(எ)கார்த்திகேயன் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பணியாற்றிய போது கார்த்திகேயனுக்கு மும்பையை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தில் தனது கார் டிரைவர் தொழிலை விட்டுவிட்டு, நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பாலியல் புரோக்கர்களுக்கு இளம் பெண்களை பிடித்து கொடுக்கும் இடைத்தரகராக பணியாற்ற தொடங்கினார். அதில் நல்ல வருமானம் வந்ததால், கார்த்திகேயன் கடந்த 9 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும், கார்த்திகேயன், ஆன்லைன் மூலம் பிரபல ஐடி நிறுவனங்களில் ஆட்கள் தேர்வு செய்யும் மேலாளராக இருப்பதாக, தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற அடிப்படை சம்பளம் ரூ.50 ஆயிரம் என்று விளம்பரம் செய்து, அதன் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கும் வடமாநிலங்களை சேர்ந்த இளம் பெண்களை ஆன்லைன் மூலமே நேர்காணல் நடத்தி வந்துள்ளார். பிறகு தேர்வு செய்யப்பட்ட அழகான பெண்களை சென்னையில் உள்ள அலுவலகத்தில் பணியாற்ற விமானம் மூலம் அழைத்து வந்துள்ளனர். மேலும், ஐடி நிறுவனம் சார்பில் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைத்து, அவர்களுக்கு சினிமா ஆசைகளை கூறி பல கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து, அதன் மூலம் சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல்களில் உள்ள பாலியல் புரோக்கர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விலை பேசி வேலைக்கு அழைத்து வந்த பெண்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

அதன்படி இளம் பெண்களை பாலியல் புரோக்கர்கள் மாத ஊதியம் அடிப்படையில் அவர்களை கட்டாயப்படுத்தியும், பண ஆசைகளை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பல லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளனர்.அந்த வகையில் கடந்த 9 ஆண்டுகளில் வேலைக்கு எடுப்பதாக கேரளா, மும்பை, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரேதேசம், ஆந்திரா, மேற்கு வங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம் பெண்களை விமானம் மூலம் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டல்களில் தங்கவைத்து கட்டாயப்படுத்தி நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதன் மூலம் மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில் கார்த்திகேயனிடம் இருந்து பிறமுதல் செய்யப்பட்ட செல்போனில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 100க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், மாடலிங் பெண்களின் புகைப்படம் உறுதி செய்வதாக இருந்தது.

தனது செல்போனில் உள்ள பெண்கள் அனைவரும் சென்னையில் உள்ள பாலியல் புரோக்கர்ளுக்கு விற்பனை செய்யப்படட பெண்கள் என்றும் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.  இதையடுத்து கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் செல்போனில் உள்ள பெண்கள் குறித்த பட்டியலை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் எடுத்து வருகின்றனர். அவர்கள் தற்போது எங்குள்ளனர் என்பது குறித்து தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். பெரிய அளவில் பாலியல் தொழிலை கார்த்திகேயன் நடத்தி வந்துள்ளதால் அவனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: