கலெக்டரின் தந்தையை தாக்கி நகை கொள்ளை

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே லூர்துபுரம் மங்கரச வலையபாளையம் பிள்ளையார்கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (86).  இவரது மகன் ரமேஷ்குமார் அவிநாசியில் கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். மகள் ராதா லட்சுமி துடியலூர் அரசு பள்ளியில் ஆசிரியராகவும் மற்றொரு மகள் சாந்தி தர்மபுரி கலெக்டராகவும் உள்ளனர். நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் முதியவர் கிருஷ்ணசாமியும், அவரது மனைவியும் வீட்டில் இருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 2 பேர் வீட்டு பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். கிருஷ்ணசாமியின் தோள்பட்டையில் தாக்கி 7 பவுன் தங்க நகை, ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பினர்.

Related Stories: