லண்டன்: 2002ல் குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடர்பாக ‘இந்தியா-மோடிக்கான கேள்விகள்‘ என்ற தலைப்பில் பிபிசி ஊடகம் ஆவணப்படம் தயாரித்துள்ளது. ஒன்றிய அரசு, இந்த படத்தை வௌியிட தடை விதித்துள்ளது. ஆவணப்படத்திற்கு இந்தியாவின் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.