திருச்சி: மணப்பாறை அருகே போத்தமேட்டு பட்டியில் புனித அந்தோனியார் ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் போத்தமேட்டு பட்டியில் அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 18-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டு ஏற்பாடுகள் முழுமை பெறாததால் ஜல்லிக்கட்டு விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று அங்குள்ள புனித வியாகுல மாதா தேவாலயத்தின் முன்பு இருக்கும் திடலில் நடைபெற்று வருகிறது.