மேலும், இந்த தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்பது பற்றிய தேர்தல் என்றார். மேலும், பாரதிய ஜனதா கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும், பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். என்னை பொறுத்தவரை பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் அல்ல கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன். இன்றைய காலகட்டத்தில் நாட்டில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும் இயக்கமாக அதிமுக உரிமை மீட்பு குழு செயல்பட்டு வருகிறது. நான் மத்திய அமைச்சராக வருவது இறைவன் கையில் தான் உள்ளது. அரசியல் நடப்பை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன் என்றும் மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
The post எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: நான் ஒன்றிய அமைச்சராவது இறைவன் கையில் உள்ளது.! மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி appeared first on Dinakaran.
