சென்னை: நாளை நடக்க உள்ள வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கைக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பொது பார்வையாளர்கள் தமிழகம் வந்தனர். வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்றுக்கு முன்பாக தபால் வாக்கு முடிவு வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.