சென்னை: தனியார் நிறுவனத்தின் 18 எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளை இடித்து அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. CRZ விதிகளுக்குப் புறம்பாக கட்டியதால் 18 எண்ணெய் சேமிப்புத் தொட்டிகளை இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் தீர்ப்பு வழங்கப்பட்டது.