சேலம் : சேலம்-மேட்டூர் இருவழிப்பாதை திட்டத்தில், சேலம்-ஓமலூர் இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. இப்பாதையில் மின்வழித்தடமும் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் தெற்கு ரயில்வேயின் பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை நடத்தினார். இதில், 121 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கி பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று, சேலம்-ஓமலூர் ரயில் பாதையின் மின்வழித்தடத்தை தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் சித்தார்தா ஆய்வு செய்தார்.