2023 ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்: டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1.48 லட்சம் பயணிகள் அதிகம்

சென்னை:  சென்னை மெட்ரோ இரயில்களில் 2023 ஜனவரி மாதத்தில் 66.07 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1.48 லட்சம் பயணிகள் அதிகம் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட ஜனவரி மாதத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 121 பயணிகள் மெட்ரோ ரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் கடந்த ஆண்டில் 01.01.2022 முதல் 31.12.2022 வரை மொத்தம் 6,09,87,765 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். இந்த வருடம் 01.01.2023 முதல் 31.01.2023 வரை மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என தகவல் வெளிட்டுள்ளனர்.

அதிகபட்சமாக 13.01.2023 அன்று 2,65,847 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2023 ஜனவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு, பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 21,96,536 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டைகளை பயன்படுத்தி 39,54,733 பயணிகள் பயணித்துள்ளார்கள்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு, பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: