கல்லூரி அருகே கஞ்சா விற்ற இருவருக்கு 12 ஆண்டுகள் சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை மாதவரத்தில், கல்லூரி அருகே கஞ்சா விற்ற இருவருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு  வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மாதவரத்தில் உள்ள கல்லூரி அருகே, ஆட்டோ ஒன்றில் கஞ்சா விற்கப்படுவதாக போதை பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுத் துறைக்கு கடந்த 2019, ஜூலை மாதம் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த கோட்டைசாமி என்பவரும், சென்னையில் தலைமை செயலகம் அருகே உள்ள சத்யா நகரை சேர்ந்த உதயகுமார் என்பவரும் சேர்ந்து 40 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக 50 கிராம் பாக்கெட்டுகளாக இரு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா வைத்திருந்த கோட்டைசாமி, உதயகுமார் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு  வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமகள் முன்பு விசாரணைக்கு வந்தது. போதைப்பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சரவணன் ஆஜராகி வாதிட்டார்.

Related Stories: