ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடியில் கோமா நிலையில் இருந்த காதலன் சாவு

ஆலந்தூர்: சென்னை கடற்கரையில் இருந்து பரங்கிமலை ரயில் நிலையம் நோக்கி வந்த மின்சார ரயிலில், கடந்த 26ம் தேதி இரவு உள்ளகரத்தை சேர்ந்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் கைகோர்த்தபடி ரயில் முன் பாய்ந்தனர். இதில், 2 பேரும் தூக்கி எறியப்பட்டதில், காதலி சிம்ரன் (15) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதில், காதலன் இளங்கோ தலையில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தகவலறிந்த மாம்பலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இளங்கோவனை மீட்டு, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் இளங்கோவிற்கு மூளைச்சாவு ஏற்பட்டு, கோமாவிற்கு சென்றார். இந்நிலையில், நேற்று காலை சிகிச்சை பயனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை அதே மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் உள்ளகரத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: