சென்னை: கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (42). இவர், அசோக் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியர். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து கே.கே.நகரில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த 2 பேர் பேசுவது போல் நடித்து திடீரென கத்திமுனையில் மிரட்டி ரூ.1000 பணத்தை பறித்தனர். அப்போது பரமசிவம் உதவி கேட்டு அலறினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த 2 பேரும் தப்பி ஓடினர். ஆனால் பொதுமக்கள் விடாமல் ஒருவனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.