சென்னை: சிறு படங்களை தியேட்டரிலும் திரையிட முடியவில்லை, ஓடிடியிலும் வெளியிட முடியவில்லை என்றார் இயக்குனரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித். இது குறித்து பா.ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறியது: பொம்மை நாயகி என்ற படத்தின் கதை மீதிருந்த நம்பிக்கையால் சிறு பட்ஜெட்டில் இதை தயாரித்துள்ளேன். ஆனால் சிறு படங்களுக்கு இப்போது வணீக ரீதியாக எந்த வரவேற்பும் இல்லை. தியேட்டர்கள் கிடைக்காத சூழல் உள்ளது. ஓடிடியை நாடிச் சென்றால் அவர்களும் சிறு படங்களை வாங்க தயங்குகிறார்கள். ஓடிடி நிறுவனம் ஒரு வருடத்துக்கு 12 படங்கள் வாங்குகிறது என்றால் அந்த 12 படங்களும் பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய படங்களாக இருக்கிறது. சிறு படங்களை வாங்காமல் காக்க வைக்கிறார்கள்.