மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு பிப்.8ல் எழுத்து தேர்வு ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம்

சென்னை: மீன்துறை ஆய்வாளர் பதவிக்கு வரும் பிப்ரவரி 8ம் தேதி எழுத்துத் தேர்வு நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மீன்துறை ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 8ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: