நகராட்சி கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் கவுன்சிலர்கள்

தக்கலை: குமரி மாவட்டம் பத்மாபபுரம் நகராட்சி சாதாரண கூட்டம் தலைவர் அருள் சோபன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது 4ம் வார்டு கவுன்சிலர் மும்தாஜ் (சுயே), 13ம் வார்டு கவுன்சிலர் சபினா (சுயே) ஆகியோர், ரூ.4.47 கோடியில் நகராட்சி சாலைகள் செப்பனிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில், எங்கள் வார்டுகளை ஏன் தேர்வு செய்யவில்லை? என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரேன இரு பெண் கவுன்சிலர்களும் நடுபகுதிக்கு சென்று,  கேனில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக மிரட்டல் விடுத்தனர். மற்ற கவுன்சிலர்கள் அவர்களிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கினர். உடனே தலைவர், விடுபட்டுள்ள வார்டுகளில் பொதுநிதியில் இருந்து பணிகள் செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்பின் இருவரும் இருக்கைக்கு சென்றனர்.

Related Stories: