டெல்லி: நாடு முழுவதும் 50 கோடி மக்கள் அரசின் இலவச மருத்துவ சேவைகளை பெற்று வருகின்றனர் என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். சரியான முடிவுகள் காரணமாக பிற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது. எல்லை பகுதியில் வசிக்கும் மக்களுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் வளர்ச்சி அடையாமல் இருந்த மாவட்டங்கள் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளன. அரசின் மக்கள் நலன் திட்டங்கள் பெண்களுக்கு முக்கியவத்துவம் கொடுப்பதாக அமைந்துள்ளது எனவும் கூறினார்.