பெரம்பூர்: தமிழ்நாடு மக்கள் பெருமைப்படும் அளவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முறையில் ஆட்சியை வழிநடத்தி வருகிறார், என்று பாலம் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், 98வது வார்டு ஆஸ்பிரன் கார்டன் பகுதியில், ஓட்டேரி கால்வாயின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் 2வது தெரு மற்றும் கீழ்ப்பாக்கம் கார்டன் தெருவை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ள குறுகலான கீழ்மட்ட பாலத்தை இடித்துவிட்டு, ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக பாலம் அமைக்கும் பணியை, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் அடிக்கல் நாட்டி நேற்று தொடங்கி வைத்தனர்.
இந்த, பாலத்தின் மொத்த நீளம் 17.60 மீட்டர், பாலத்தின் அகலம் 11.50 மீட்டர் (இருபுறமும் நடைபாதையின் அகலம் 1.5 மீட்டர்) இதன் பணிகள் 24 மாதங்களில் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், தயாநிதி மாறன் எம்பி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சென்னை ஆஸ்பிரின் பாலம் குறுகிய பாலமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். நாங்கள், தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்ததை நிறைவேற்றும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், இப்பகுதி மக்களின் 10 ஆண்டுகாள கோரிக்கையை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு எடுத்த முயற்சியால், 2 வாரங்களில் நிறைவேற்றி, அதனை செயல்படுத்தியுள்ளார்.