தண்டையார்பேட்டை: காசிமேட்டில் மாநகர பேருந்து கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து, கடந்த 27ம் தேதி மணலி நோக்கி மாநகர பேருந்து (தடம் எண்:56டி) புறப்பட்டது. அப்போது, பேருந்தில் ஏறிய 5 பேர், படிக்கட்டில் தொங்கியபடி ரகளையில் ஈடுபட்டதால், அவர்களை நடத்துனர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், காசிமேடு எஸ்என் செட்டி தெரு புதுமனைக்குப்பம் அருகே பேருந்தில் இருந்து இறங்கி, கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பினர்.