காரைக்குடி: காரைக்குடியில் தனியார் இடத்தில் வைத்த பெரியார் சிலையை அகற்றிய தாசில்தார், டிஎஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம் நகரை சேர்ந்தவர் இளங்கோ. பெரியார் உணர்வாளரான இவர், கோட்டையூரில் உள்ள தனது வீட்டின் சுற்றுச்சுவரில் பெரியார் மார்பளவு சிலையை நிறுவினார். இதன் திறப்பு விழா நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டதாக காரைக்குடி தாசில்தார் கண்ணன், தேவகோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் திறப்பு விழாவிற்கு தடை விதித்தனர்.