தமிழ்நாட்டில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் சூரிய ஒளி மூலம் 4725 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் ேநற்று சூரிய ஒளி மூலம் 4725.91 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் இந்தியாவிற்கே தமிழ்நாடு மிகப்பெரிய முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி அதிகரித்து கொண்டே வருகிறது.  

அனல் மின் நிலையம், அணுமின் நிலையங்கள் அல்லாமல் மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் காற்று மாசு ஏற்படுவது தவிர்க்கப்படும். செலவு குறைவாக சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாத வகையில் உள்ளது. முக்கியமாக ஆசியாவிலேயே தமிழ்நாட்டில்தான் காற்றாலை மூலம் அதிகம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதன்படி புதிய உச்சமாக  நேற்று ஒரேநாளில் சூரிய ஒளி மூலம் 4725.91 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,‘‘தமிழ்நாடு முதலமைச்சரின் நல்லாட்சியில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் சூரிய ஒளி மூலம் 4725.91 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின் உற்பத்தியில் தமிழகம் உச்சம் தொட்டு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: