சென்னை: பழனி முருகன் கோயிலில் 48 நாட்கள் மண்டல பூஜை, தைப்பூசத் திருவிழாவால் எந்த தடையும் இல்லாமல் ஆகம விதிப்படியே நடைபெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.ஆர்.ஆர் ரமேஷ் என்பவர் அவசர மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்ற பழனி முருகன் கோயிலில் 48 நாட்கள் மண்டல பூஜை பெயரளவிலேயே நடைபெறுகிறது. ஆகம விதிப்படி நடைபெறவில்லை. தைப்பூச திருவிழா நடைபெறுவதால் மண்டல பூஜை தடைபட வாய்ப்புள்ளது. எனவே, ஆகம விதிப்படி மண்டல பூஜை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.