சென்னை: குற்றப்பதிவேடு பட்டியலில் இடம்பெற்ற வழக்கறிஞர் சத்தியசீலன் தொழில் செய்ய தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் டி.ேக.சத்தியசீலன். வழக்கறிஞராக கடந்த 2014ல் தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞர் தொழிலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் மீது 9 குற்ற வழக்குகளும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் இவருக்கு வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் கடந்த 2010ல் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.