ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று. இதனால் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் ஜோலார்பேட்டை மார்க்கமாக இயக்கப்படுகிறது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு இயற்கை உபாதைகளை கழிக்க ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆனால் சிறிய அளவிலான கழிவறை உள்ளதால் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் இந்த ரயில் நிலையத்தில் போதுமானதாக கழிவறை வசதி இல்லாமல் உள்ளது. மேலும் ரயில் நிலையம் வெளியே ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் ரயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கழிவறை கட்டிடம் அமைக்கப்பட்டது.