சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளர் சிவபிரசாத் போட்டியிட உள்ளதாக அக்கட்சியே பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார் . வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஏ.எம்.சிவபிரசாத் 29 வயதுடைய இளைஞர். ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளராக சிவபிரசாத் செயல்பட்டு வருகிறார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கடந்த 5-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளா்கள் உள்ளனா். வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. மார்ச் 2-ந் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.